முகப் பராமரிப்பு

முகப்பரு அதிகமா வருதா? இதோ மறைய வைக்கும் அற்புத வழிகள்!

கோடைக்காலம் வந்துவிட்டது. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. பலரும் கொளுத்தும் வெயிலால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்தும் வருகிறார்கள். அதில் கோடையில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஓர் சரும பிரச்சனை என்றால் அது முகப்பருக்கள் தான். உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக வந்து உங்கள் முக அழகை பாழாக்கிக் கொண்டிருக்கிறதா? அதைத் தடுப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

முகப்பருக்களைப் போக்க பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அதில் நாம் இப்போது பார்க்கப் போவது உணவுகளைப் பற்றியோ அல்லது ஃபேஸ் மாஸ்க்குகளைப் பற்றியோ அல்ல. மருத்துவ குணங்கள் நிறைந்த இலைகளைப் பற்றி தான். அதுவும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இலைகளைக் கொண்டே எளிதில் முகப்பருக்களை மாயமாய் மறைய வைக்கலாம். இப்போது முகப்பருக்களைப் போக்க உதவும் அந்த இலைகள் எவையென்பதையும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

லெமன் கிராஸ் என்னும் எலுமிச்சை புல்லில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அதிலும் லெமன் கிராஸ் எண்ணெயில் உள்ள சிட்ரல் என்னும் உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கவும் செய்யும். அதற்கு அந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் நனைத்து முகப்பருக்களின் மீது தடவ வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலை ஒரு பாரம்பரிய நிவாரணப் பொருள். இது சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அழுக்குகள் சருமத் துளைகளை அடைப்பதைத் தடுக்கிறது. முக்கியமாக சரும தொற்றுகள் மற்றும் முகப்பருக்களைப் போக்குகிறது. அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கொய்யா இலை

கொய்யா இலையில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கவும் செய்யும். அதற்கு கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் முகத்தைக் கழுவ வேண்டும்.

வெந்தய கீரை

வெந்தயக் கீரையில் ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சருமத்தில் முகப்பருக்களின் தழும்புகளைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதற்கு சிறிது வெந்தய கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும்.

புதினா

புதினா இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. இது சருமத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி, சிறந்த டோனர் போன்றும் செயல்படுகிறது. இதில் உள்ள சாலிசிலிக் அமிலம், பிம்பிளைத் தடுக்க உதவுகிறது. அதற்கு புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து அல்லது சாறு எடுத்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீரால் நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button